எமது சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வாசிப்பு மாதத்தின் இறுதிநிகழ்வான பரிசளிப்புவிழா 08.11.2023 அன்று நெளுக்குளத்தில் அமைந்துள்ள சண் திருமண மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இப்பரிசளிப்பு விழாவில் எம்மால் நடாத்தப்பட்ட வாசிப்புமாத போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசில்களை பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் இந்நிகழ்வின் விசேட அம்சமாக அரங்காலயா நாடக நிறுவனத்தினரால் அரங்கேற்றப்பட்ட “துயரோசை” நாடகம் அனைவரது மனதையும் கவர்ந்தது.