








எமது சபையால் LDSP செயற்றிட்டத்தின் நிதியுதவியின் கீழ் பம்பைமடுவில் நிர்மாணிக்கப்படவுள்ள கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 15.05.2024 (நேற்றைய தினம்) காலை 8.30 மணியளவில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் எமது சபை செயலாளர்,தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
எமது சபையால் LDSP செயற்றிட்டத்தின் நிதியுதவியின் கீழ் ஓமந்தை வன்னி அறுசுவையகத்தின் எல்லைப்பரப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம்(03.05.2024) காலை 10.00 மணியளவில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,எமது சபை செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் புதிய கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.