பிரியாவிடை நிகழ்வு-(29.05.2024)

இதுவரை காலமும் எமது சபையில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெற்றுச்செல்லும் திரு.சிவஞானம் அவர்களின் பிரிவுபசார நிகழ்வு எமது சபையால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் இன்றையதினம்(29.05.2024) மாலை 3.00 மணியளவில் எமது சபையின் சபாமண்டபத்தில் எமது சபை செயலாளர் தலைமையில் மேற்படி பிரிவுபசார நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் எமது சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 

பம்பைமடு கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா-(15.05.2024)

எமது சபையால் LDSP செயற்றிட்டத்தின் நிதியுதவியின் கீழ் பம்பைமடுவில் நிர்மாணிக்கப்படவுள்ள கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 15.05.2024 (நேற்றைய தினம்) காலை 8.30 மணியளவில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் எமது சபை செயலாளர்,தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

 

கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல்நாட்டுவிழா (03.05.2024)

எமது சபையால் LDSP செயற்றிட்டத்தின் நிதியுதவியின் கீழ் ஓமந்தை வன்னி அறுசுவையகத்தின் எல்லைப்பரப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம்(03.05.2024) காலை 10.00 மணியளவில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,எமது சபை செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் புதிய கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.