இதுவரை காலமும் எமது சபையில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெற்றுச்செல்லும் திரு.சிவஞானம் அவர்களின் பிரிவுபசார நிகழ்வு எமது சபையால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் இன்றையதினம்(29.05.2024) மாலை 3.00 மணியளவில் எமது சபையின் சபாமண்டபத்தில் எமது சபை செயலாளர் தலைமையில் மேற்படி பிரிவுபசார நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் எமது சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.








