எமது சபையில் அர்பணிப்பான சேவையாற்றி வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற மற்றும் எமது சபையிலிருந்து விடைபெற்றுச்சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு 28.06.2024 அன்றையதினம் பிற்பகல் 02.00 மணியளவில் எமது சபையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் சபையின் சபா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இப்பிரியாவிடை நிகழ்வில் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்
திரு.எட்வேர்ட்-றொக்சன்
(அபிவிருத்தி உத்தியோகத்தர்)
திரு.சுப்பிரமணியம்-வரதகுமார்
(அபிவிருத்தி உத்தியோகத்தர்)
திருமதி.நாகேந்திரம்-பவித்திராயணி
(அபிவிருத்தி உத்தியோகத்தர்)
திருமதி.முகலாயன்-சங்கீதா
(அபிவிருத்தி உத்தியோகத்தர்)
திருமதி.லோகேஸ்வரன்-கோகிலவாணி
(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்)
திருமதி.ஶ்ரீஸ்கந்தராஜா-றபேக்கா
(வருமானப்பரிசோதகர்)
திருமதி.பாத்திமா பஸ்னா றபிவுத்தீன்
(வருமானப்பரிசோதகர்)
திரு.கந்தசாமி-கிரிகரன்
(சுகாதாரத்தொளிலாளி)
இதுவரை காலமும் எமது சபையில் தமது அர்ப்பணிப்பான சேவையை வழங்கி வேறுஅலுவலகங்களுக்கு இடமாற்றலாகி சென்றிருக்கும் உத்தியோகத்தர்களின் பணி மென்மேலும் சிறக்கவும் சபையிலிருந்து விடைபெற்றுச்சென்ற உத்தியோகத்தர்களின் எதிர்காலம் சிறப்புடன் அமையவும் எமது சபை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இவர்கள் எமது சபையில் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைக்கு எமது மனமாரந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பிரியாவிடை நிகழ்வின் பதிவுகள்.
இன்றையதினம் (26.06.2024) தோணிக்கல் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் எம்மால் நடாத்தப்பட்ட இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் ஆதனவரி செலுத்துவதற்கான நடமாடும் சேவையின் போதான பதிவுகள்




தற்சமயம் எமது நடமாடும் சேவை மற்றும் இலவச மருத்துவமுகாம் தோணிக்கல் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று பிற்பகல் 03.30 மணிவரை இந்நடமாடும் சேவை நடைபெறும்.
