இன்றையதினம்(11.09.2024) நூலகங்களுக்கு புதிதாக அங்கத்தவர்களை இணைப்பதற்காக வழங்கப்பட்ட அடைவுமட்டத்தை அடைந்த நூலகங்களுக்கு அமைச்சின் செயலாளர் அவர்களால் மெச்சுரை(Commendation)வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது வ/உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வானது வ/உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது.
இந்த மெச்சுரை கௌரவத்தினை எமது சபையின்கீழ் இயங்கும் கூமாங்குளம் பொதுநூலகம் மற்றும் ஓமந்தை பொதுநூலகம் ஆகியன பெற்றுக்கொண்டதற்கமைவாக உத்தியோகத்தர்களை சிறப்புற வழிநடத்திய எமது சபை செயலாளர் மற்றும் சிறந்த அடைவினை எட்டிய உத்தியோகத்தர்கள் மேற்படி மெச்சுரை கௌரவத்தினை பெற்றுக்கொண்டனர்.
மேற்படி உத்தியோகத்தர்களுக்கு எமது சபைசார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கௌள்வதோடு இந்நிகழ்வில் மெச்சுரை கௌரவத்தினை பெற்றுக்கொண்ட நூலகங்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் சிறப்பான ஆலோசனைகள் மூலம் எம்மை வழிநடத்திச்செல்லும் எமது அமைச்சின் செயலாளர்,உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு நாம் இந்நேரத்தில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்,உள்ளூராட்சி ஆணையாளர்,உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் பதிவுகள்…..