பெரிய வெள்ளி தினத்தினை முன்னிட்டு (16.04.2025) அன்றையதினம் கல்வாரி புனித தலத்தின் வளாகத்தினை துப்புரவாக்கும் நோக்கில் சிரமதான நிகழ்வொன்று எமது சபையால் நடாத்தப்பட்டது. இந்த சிரமதான நிகழ்வில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகமும் எம்முடன் கைகோர்த்திருந்தது.








