இன்றையதினம்(21.03.2024) PERFECT 2+ COMPETITION க்கான தேசிய ரீதியிலான மதிப்பாய்வு எமது சபையில் நடைபெற்றது.உள்ளுராட்சி அமைச்சிலிருந்து வருகை தந்திருந்த ஆறு(06) பேர் கொண்ட தேசியரீதியிலான குழுவினர் இந்த மதிப்பாய்வினை மேற்கொண்டிருந்தனர்.
ஏற்கனவே மாகாண ரீதியில் பிரதேச சபைகளிடையே மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வில் வடமாகாணத்தில் இருந்து தேசியரீதியிலான மதிப்பாய்வுக்கு தெரிவுசெய்யப்பட்ட மூன்று பிரதேசசபைகளுள் எமது சபையும் தெரிவுசெய்யப்பட்டமைக்கமைவாக இன்றையதினம் இவ்மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த மதிப்பாய்வுக்கு முழுஈடுபாட்டுடன் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கிய எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்இசுகாதார வைத்திய அதிகாரிஇபொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் சனசமூக நிலையத்தினர் ஆகியோருக்கு எமது சபை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.