📙 நூல்கள் தொடர்பான கருத்தறிதல் 🔖📗

எமது சபையின் ஆளுகையின் கீழுள்ள ஓமந்தை மற்றும் கூமாங்குளம் பொதுநூலகங்களுக்கு வருடா வருடம் சபையின் நிதியொதுக்கீட்டில் நூல்கொள்வனவு செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இவ்வருடம் நூல்கொள்வனவுக்கென ஒதுக்கப்பட்ட நிதுயொதுக்கீட்டில் வாசகர்களின் தேவையை பூர்த்திசெய்யும் நோக்கில் வாசகர்களிடமும் நூல்கள் பற்றி கருத்தறிந்து அவர்களின் தேவையின் அடிப்படையில் நூல்கள் கொள்வனவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களாகிய நீங்கள் உங்களுக்கு எவ்வாறான நூல்கள் அவசியம் மற்றும் அந்த நூல்கள் பற்றிய விபரங்களை எமக்கு 19.07.2024 ஆம் திகதிக்கு முன்னதாக எமக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அவ்வகை நூல்களை நாம் கொள்வனவு செய்து உங்களது தேவையை இலகுவாக்கமுடியும் என்பதனை அன்புடன் அறியத்தருகின்றோம்.
எம்மை தொடர்பு கொள்ள
அலுவலக தொலைபேசி:-0242225737
கூமாங்குளம் பொதுநூலகம்:-0242051781
ஓமந்தை பொதுநூலகம்:-0242052731
அலுவலக மின்னஞ்சல்:-npvstps@yahoo.com
அல்லது எமது அலுவலகத்திற்கு நேரடியாகவும் வருகை தந்து தங்களது புத்தக கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.
நன்றி
தகவல்
செயலாளர்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *