இன்றையதினம்(24.07.2024) எமது சபையின் ஆளுகையின் கீழுள்ள பொன்னாவரசன்குளம் அறிவொளி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அப்பகுதி பாடசாலை மாணவர்களால் “போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு நற்பண்புடைய மனிதனாய் மாறுவோம்”எனும் தொனிப்பொருளில் போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதிநாடகம் அரங்கேற்றப்பட்டது.
இவ்வீதி நாடகத்தினை பொதுமக்கள் பலர் கண்டுகளித்தனர்.
போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படும் தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கு மிக மிக அவசியமான இந்த போதைப்பொருள் பாவனை எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதிநாடகத்தினை அரங்கேற்றிய மாணவர்களுக்கும் இதனை ஒழுங்குபடுத்திய பொன்னாவரசன்குளம் அறிவொளி சனசமூக நிலையத்தினருக்கும் எமது சபைசார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ்வீதி நாடகத்தின்போது….



