எமது சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்புமாத பரிசளிப்பு விழா கடந்த 07.12.2024 அன்றையதினம் நெளுக்குளம் சண் மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இப்பரிசளிப்பு விழாவில் எமது சபையின் நூலகங்களால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சிறந்த வாசகர்கள் மற்றும் உள்ளுர் எழுத்தாளர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.