எமது சபையால் 2022 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களிலிருந்து உலகவங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின்(LDSP) கீழ் 2023/2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான முதலாவது கூட்டம் 25.09.2023 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு எமது சபை சபா மண்டபத்தில் சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வழங்கினர்.
இக்கூட்டத்திற்கு வருகைதர தவறியோர் எதிர்வரும் 30.09.3023 பிற்பகல் 2.00 மணிக்கு எமது சபை சபாமண்டபத்தில் நடைபெறும் இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.