முன்பள்ளிகள்

சபைக்குரிய பாலர் பாடசாலை ஓமந்தையில் உள்;ராட்சி மன்றத்தினால் அடிப்படை வசதிகளுடன்  உள்;ராட்சி மன்ற நிதியின் மூலம் இவ் பாலர் பாடசாலைகள் இயங்கி வருகின்றது .அத்துடன் பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவர் கடமையாற்றி வருகின்றார்.

 

2023ம் ஆண்டு தை மாதம் புதிய பிள்ளைகளை வரவேற்றல் நிகழ்வு நடைபெற்றது. பெற்றோர் பிள்ளைகளின் தரவுகளை சேகரித்து பதிவு செய்யப்பட்டது. பெற்றோர்களுடனான ஒன்று கூடல் சிரமதானம் பணிகள் என்பன இடம் பெற்றதோடு பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளின் விசேட தேவை  பற்றி அறிந்து கொண்டதுடன் பிள்ளைகளுக்கான மருத்துவ பரிசோதனையும் மேற் கொள்ளப்பட்டது. 

பிள்ளைகளின் தரத்திற்கேற்ப  முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளரின் ஆலோசனைக்குழு அமைவாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டனர.; அதாவது ஓட்டுச்சித்திரங்கள், ஆக்கங்கள், களிமண், உருவங்கள், கழிவுப்பொருட்களில் ஆக்கங்கள், அச்சுப்பதித்தல,; உருவங்கள் பொருத்துதல் போன்ற ஒருங்கிணைந்த செயற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் முன் பள்ளியில்; சரஸ்வதிப் பூசை, சிறுவர் தினம், ஆசிரியர் தினம், கிறிஸ்மஸ் தினம் என்பன மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.