இன்றையதினம் (26.06.2024) தோணிக்கல் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் எம்மால் நடாத்தப்பட்ட இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் ஆதனவரி செலுத்துவதற்கான நடமாடும் சேவையின் போதான பதிவுகள்
இன்றையதினம் (26.06.2024) தோணிக்கல் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் எம்மால் நடாத்தப்பட்ட இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் ஆதனவரி செலுத்துவதற்கான நடமாடும் சேவையின் போதான பதிவுகள்
எமது சபையால் LDSP செயற்றிட்டத்தின் நிதியுதவியின் கீழ் பம்பைமடுவில் நிர்மாணிக்கப்படவுள்ள கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 15.05.2024 (நேற்றைய தினம்) காலை 8.30 மணியளவில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் எமது சபை செயலாளர்,தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
எமது சபையால் LDSP செயற்றிட்டத்தின் நிதியுதவியின் கீழ் ஓமந்தை வன்னி அறுசுவையகத்தின் எல்லைப்பரப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம்(03.05.2024) காலை 10.00 மணியளவில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,எமது சபை செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் புதிய கடைத்தொகுதிகளுக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.
இன்றையதினம்(21.03.2024) PERFECT 2+ COMPETITION க்கான தேசிய ரீதியிலான மதிப்பாய்வு எமது சபையில் நடைபெற்றது.உள்ளுராட்சி அமைச்சிலிருந்து வருகை தந்திருந்த ஆறு(06) பேர் கொண்ட தேசியரீதியிலான குழுவினர் இந்த மதிப்பாய்வினை மேற்கொண்டிருந்தனர்.
ஏற்கனவே மாகாண ரீதியில் பிரதேச சபைகளிடையே மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வில் வடமாகாணத்தில் இருந்து தேசியரீதியிலான மதிப்பாய்வுக்கு தெரிவுசெய்யப்பட்ட மூன்று பிரதேசசபைகளுள் எமது சபையும் தெரிவுசெய்யப்பட்டமைக்கமைவாக இன்றையதினம் இவ்மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த மதிப்பாய்வுக்கு முழுஈடுபாட்டுடன் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கிய எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்இசுகாதார வைத்திய அதிகாரிஇபொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் சனசமூக நிலையத்தினர் ஆகியோருக்கு எமது சபை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வடமாகாணத்தின் 34 உள்ளுராட்சி மன்றங்களால் உருவாக்கப்பட்ட இணையத்தளங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு 01.03.2024 அன்றையதினம் காலை 10மணியளவில் பிரதம செயலாளர் அலுவலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பிரணவநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது 34 உள்ளுராட்சிமன்றங்களுக்குமான இணையத்தளங்கள் வடக்குமாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில் நேரவிரயமில்லாமல் தமது தேவையினை நிறைவேற்ற எண்ணும் இன்றைய கால நவீன சமூகத்திற்கு இணையத்தளம் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும் என தெரிவித்தார்.
அத்துடன் உள்ளுராட்சி நிறுவனங்கள் ஆளுகின்ற அமைப்பாக காணப்படுகின்றது எனவும் வரிசேகரிப்பு,சட்டஉருவாக்கம்,சேகரித்த பணத்தினை திட்டமிட்டு செலவழித்தல் மற்றும் திட்டமொன்றை உருவாக்கி அதனை நிறைவேற்றி முடித்தல் போன்றனவற்றிற்கு அதிகாரத்தினை கொண்டு காணப்படுவதனால் ஏனைய அரச நிறுவனங்களிலிருந்து உள்ளுராட்சி நிறுவனங்கள் தனித்துவம் மிகுந்தவை எனவும் வடமாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து இந்த இணையத்தள உருவாக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்ட உள்ளுராட்சி சபை உத்தியோகத்தர்களுக்கும் இவ் இணையத்தள உருவாக்கம் தொடர்பான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் உத்தியோகத்தர்களுக்கு வழங்கி இவ் இணையத்தள உருவாக்கத்தில் உறுதுணையாக இருந்த வளவாளர் குழாத்தினருக்கும் மெச்சுரைகள் வழங்கி கௌரவிக்கப்பட்து.
எமது சபைக்கான இணையத்தளத்தினை (www.vavuniyastamil.ps.gov.lk) எமது சபை உத்தியோகத்தர்களான திருமதி.றம்மியா டினோட் றொசாந்,திரு.வாமதேவா துவாரகன் மற்றும் திருமதி.வினிற்றன் மிலோஜா ஆகியோர் வடிவமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்குமாகாண பிரதமசெயலாளர்,உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர்,வடமாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள்,சபை செயலாளர்கள்,UNDP அமைப்பின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
2024 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு எமது சபை அலுவலகத்தில் 01.01.2024 சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு 2024 ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
எமது அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் மாகாணமட்ட செயலாற்றுகை மதிப்பீடு PERFECT 2.0 27.10.2023 அன்று நடைபெற்றது.
இஅதன்போது எமது சபையின் ஆவணங்கள் மதிப்பீட்டுக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டன.
2023 ஆம் ஆண்டுக்கான நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி பூஜை நிகழ்வுகள் 23.10.2023 அன்று எமது சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.
இப்பூஜையில் எமது சபையின் செயலாளர் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கௌரவமான மற்றும் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்பினையும் எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினையும் முன்னிறுத்துதல் எனும் அபிவிருத்தி இலக்கிற்கமைய எமது சபையினால் தேசிய வாசிப்புமாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கம் பெற்ற அவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் வகையிலான அழகிய ஆக்கங்கள் மற்றும் எமது அறிவிற்கு ஆதாரமான புத்தகங்கள் ஆகியன கண்காட்சிக்காக வைக்கப்படன.
இக்கண்காட்சி 18.10.2023 மற்றும் 19.10.2023 ஆகிய இருதினங்களும் எமது சபையின் கூமாங்குளம் பொதுநூலகத்தில் நடைபெற்றது.
கண்காட்சியினை ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
எமது சபையால் 2022 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களிலிருந்து உலகவங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின்(LDSP) கீழ் 2023/2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான முதலாவது கூட்டம் 25.09.2023 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு எமது சபை சபா மண்டபத்தில் சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வழங்கினர்.
இக்கூட்டத்திற்கு வருகைதர தவறியோர் எதிர்வரும் 30.09.3023 பிற்பகல் 2.00 மணிக்கு எமது சபை சபாமண்டபத்தில் நடைபெறும் இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.